Saturday, June 9, 2012

உன்நினைப்பு!

நீ என் அருகில் இல்லை!
ஆனால் நினைவில் நிற்கிறாய்!
இசை கேட்டு கவனம் திருப்பலாம் என்றால் - அத்தனையிலும்
நீயே பவனி வருகிறாய்!
நீ இல்லா இடம் பாலைவனம்!
பாலைவனத்து மழை - என் கண்ணில்!
நினைவில் மட்டும் நீ -
பாலைவனத்து இடி!
உன்நினைவால் நானும் ஆகிறேன் தவிடுபொடி!
இது உறவு தொலைத்தவன் கிறுக்கல் அல்ல!
உன் உறவின் அருமை புரிந்தவனின் கிறுக்கல்!
சிறு குழந்தையாய் வந்தாய் - எனை குழந்தையாக்கி சென்றாய்!
துயில் எழுந்திடு சீக்கிரம் - உன் அழைப்பிற்க்காய் காத்திருக்கிறது
என் அலைபேசியின் பச்சை பொத்தான்!
சேர்ந்தே தவிக்கின்றான் உன் அத்தான்!



3 comments: