Thursday, June 14, 2012

மடல்

என் இனிய பிரியத்திற்கு,
உனக்கும் எனக்கும் போட்டியென்றால் -
பிறப்பால் முந்திவிட்டாய் நீ!
பாசத்தால் முந்தநினைக்கின்றேன் நான்!
ஆனாலும் இன்று பலநேரம் கோபத்தின் முன் நிற்கிறேன் -
அதனால்  பாசவெளிப்பாட்டில் பின் நிற்கிறேன்!
என் இதயமும் சதையால் ஆனது தானம்மா!
உன் பல நேர தொடர் தவறுகள் முள்ளாய் தைக்கும் போது -
வார்த்தைகளால் கொந்தளிக்கிறேன்!
பின் கண்ணிரண்டில் உப்புத்தண்ணீரை கொப்பளிக்கிறேன்!
என் மனதில் பட்டதை கொட்டிவைக்கிறேன்!
புரிவதும் - பிடிவாதத்தால் அழிவதும் உன் பிரியம்!
நம்பிக்கையுடன் பாசக்கோட்டையை விட்டு வைக்கிறேன் -
நீ வந்து விளக்கேற்றிட!

No comments:

Post a Comment