Monday, June 25, 2012

கன்னி-கணவன்


கொஞ்சி பேசும் காதலனாய்!
கனிவான கணவனாய்!
இல்லாள் எதிர்பார்ப்புக்கேற்ப இல்லாமல் -
கண்டிப்பான தந்தையாய் ஆனேன்!
கந்தலும் ஆனேன்!
கண்டுகொண்டேன் நான்!
கன்னி கனவென்ன -
கணவன் துயரென்ன?

Sunday, June 17, 2012

காதல்


பிரியமானவர் பிரியும்பொழுது இமை இரண்டும் அழுத்தி மூடிக் கொள்கிறேன்! எப்படியும் கசிந்துவிடுகிறது - காதல்! கண்ணீராய்!

Thursday, June 14, 2012

மடல்

என் இனிய பிரியத்திற்கு,
உனக்கும் எனக்கும் போட்டியென்றால் -
பிறப்பால் முந்திவிட்டாய் நீ!
பாசத்தால் முந்தநினைக்கின்றேன் நான்!
ஆனாலும் இன்று பலநேரம் கோபத்தின் முன் நிற்கிறேன் -
அதனால்  பாசவெளிப்பாட்டில் பின் நிற்கிறேன்!
என் இதயமும் சதையால் ஆனது தானம்மா!
உன் பல நேர தொடர் தவறுகள் முள்ளாய் தைக்கும் போது -
வார்த்தைகளால் கொந்தளிக்கிறேன்!
பின் கண்ணிரண்டில் உப்புத்தண்ணீரை கொப்பளிக்கிறேன்!
என் மனதில் பட்டதை கொட்டிவைக்கிறேன்!
புரிவதும் - பிடிவாதத்தால் அழிவதும் உன் பிரியம்!
நம்பிக்கையுடன் பாசக்கோட்டையை விட்டு வைக்கிறேன் -
நீ வந்து விளக்கேற்றிட!

Saturday, June 9, 2012

உன்நினைப்பு!

நீ என் அருகில் இல்லை!
ஆனால் நினைவில் நிற்கிறாய்!
இசை கேட்டு கவனம் திருப்பலாம் என்றால் - அத்தனையிலும்
நீயே பவனி வருகிறாய்!
நீ இல்லா இடம் பாலைவனம்!
பாலைவனத்து மழை - என் கண்ணில்!
நினைவில் மட்டும் நீ -
பாலைவனத்து இடி!
உன்நினைவால் நானும் ஆகிறேன் தவிடுபொடி!
இது உறவு தொலைத்தவன் கிறுக்கல் அல்ல!
உன் உறவின் அருமை புரிந்தவனின் கிறுக்கல்!
சிறு குழந்தையாய் வந்தாய் - எனை குழந்தையாக்கி சென்றாய்!
துயில் எழுந்திடு சீக்கிரம் - உன் அழைப்பிற்க்காய் காத்திருக்கிறது
என் அலைபேசியின் பச்சை பொத்தான்!
சேர்ந்தே தவிக்கின்றான் உன் அத்தான்!