அவள் அன்பு - அது
எனை கொய்யும் அம்பு!
அவளின் பாசம் - என்னுயிர்
வாழ வைக்கும் சுவாசம்!
இப்படித்தான் கழிகின்றன என் முப்பொழுதும்!
இனி ஏதும் கேட்கப்போவதில்லை எப்பொழுதும்!
தவறு செய்யாதோர் யாருமில்லை - தப்பாக
அதை தொடரவிட்டால் - உறவினில் சாறும் இல்லை!
கோபம் நான் கொண்ட பாபம்!
மெய் புரிந்தாயாயின் -
படுவாய் பரிதாபம்!!
கடந்ததென்னவோ இரு பத்து ஆண்டுகள் - காத்துக் -
கிடக்கின்றன பல பத்து ஆண்டுகள்!!
மாற்றம் ஒன்றே மாறாதது - மனதும்
மாறிப்போனால் வடு ஆறாதது!
நீ புரியவேண்டும் - அது சிறப்பு!
அறியவேண்டும் உன் பொறுப்பு!
புரியாவிட்டால் வரும் வெறுப்பு!
தொடரவிட்டால் அனைவர்க்கும் நமைக்கண்டு நகைப்பு!
தவிர்ப்பும் - தண்டனை தான் -
வலிக்காவிட்டால் கொடுத்தவனக்கு
அதுவே தவிப்பும் தான்!
மாறித்தாம் ஆகவேண்டும் - இல்லையேல்
இருவரும் நாறித்தான் போக வேண்டும்!
இனி சொல்ல ஏதும் இல்லை -
பிணி போக்க வழியும் இல்லை!
ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவன்
மறைவதில்லை - ஆயிரம் ஊடல்கள் நடுவில்
வந்தாலும் - என் காதலும் அழிவதில்லை!
அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!
--நிலாக்காவலன்!
எனை கொய்யும் அம்பு!
அவளின் பாசம் - என்னுயிர்
வாழ வைக்கும் சுவாசம்!
இப்படித்தான் கழிகின்றன என் முப்பொழுதும்!
இனி ஏதும் கேட்கப்போவதில்லை எப்பொழுதும்!
தவறு செய்யாதோர் யாருமில்லை - தப்பாக
அதை தொடரவிட்டால் - உறவினில் சாறும் இல்லை!
கோபம் நான் கொண்ட பாபம்!
மெய் புரிந்தாயாயின் -
படுவாய் பரிதாபம்!!
கடந்ததென்னவோ இரு பத்து ஆண்டுகள் - காத்துக் -
கிடக்கின்றன பல பத்து ஆண்டுகள்!!
மாற்றம் ஒன்றே மாறாதது - மனதும்
மாறிப்போனால் வடு ஆறாதது!
நீ புரியவேண்டும் - அது சிறப்பு!
அறியவேண்டும் உன் பொறுப்பு!
புரியாவிட்டால் வரும் வெறுப்பு!
தொடரவிட்டால் அனைவர்க்கும் நமைக்கண்டு நகைப்பு!
தவிர்ப்பும் - தண்டனை தான் -
வலிக்காவிட்டால் கொடுத்தவனக்கு
அதுவே தவிப்பும் தான்!
மாறித்தாம் ஆகவேண்டும் - இல்லையேல்
இருவரும் நாறித்தான் போக வேண்டும்!
இனி சொல்ல ஏதும் இல்லை -
பிணி போக்க வழியும் இல்லை!
ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவன்
மறைவதில்லை - ஆயிரம் ஊடல்கள் நடுவில்
வந்தாலும் - என் காதலும் அழிவதில்லை!
அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!
--நிலாக்காவலன்!