Monday, September 10, 2012

பாரதி கண்ட பாரினை அமைத்திடுவோம்

எட்டயபுரத்தில் பிறந்தான் - கவித்திறத்தால்
எட்டா புகழ் பெற்றான்!

மொழிகள் பல அறிந்திருந்தான் - அதிலும் தமிழ்
சிறப்பென உண்மை உரைத்திருந்தான்!!

சக்தி அவன் வணங்கியது !
பாட்டு மூலமாய் போராட்ட -
சக்தி - அவன் வழங்கியது!!

சாதிகளை சாடியவன் - பெண்ணியத்துக்காய்
பாடியவன்!

பாடிவிட்டு அவன் மறைந்தான் -
கேட்டுவிட்டு நாம் மறந்தோம்!!

பெண்ணுரிமை புரிவோம் - நல்
சுதந்திரம் காப்போம்!

சாதிச்செடி அறுப்போம் - அதர்மம்
வெறுப்போம்!

இளமையில் கற்ப்போம் -
முதுமையில் கற்பிப்போம்!

பாரதி கண்ட பாரினை அமைத்திடுவோம்!

No comments:

Post a Comment