Thursday, September 27, 2012

அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

அவள் அன்பு - அது
எனை கொய்யும் அம்பு!

அவளின் பாசம் - என்னுயிர்
வாழ வைக்கும் சுவாசம்!

இப்படித்தான் கழிகின்றன என் முப்பொழுதும்!
இனி ஏதும் கேட்கப்போவதில்லை எப்பொழுதும்!

தவறு செய்யாதோர் யாருமில்லை - தப்பாக
அதை தொடரவிட்டால் - உறவினில் சாறும் இல்லை!

கோபம் நான் கொண்ட பாபம்!
மெய் புரிந்தாயாயின் -
படுவாய் பரிதாபம்!!

கடந்ததென்னவோ இரு பத்து  ஆண்டுகள்  - காத்துக் -
கிடக்கின்றன பல பத்து ஆண்டுகள்!!

மாற்றம் ஒன்றே மாறாதது - மனதும்
மாறிப்போனால் வடு ஆறாதது!

நீ புரியவேண்டும் - அது சிறப்பு!
அறியவேண்டும் உன் பொறுப்பு!
புரியாவிட்டால் வரும் வெறுப்பு!
தொடரவிட்டால் அனைவர்க்கும் நமைக்கண்டு நகைப்பு!

தவிர்ப்பும் - தண்டனை தான் -
வலிக்காவிட்டால் கொடுத்தவனக்கு
அதுவே தவிப்பும் தான்!

மாறித்தாம் ஆகவேண்டும் - இல்லையேல்
இருவரும் நாறித்தான் போக வேண்டும்!

இனி சொல்ல ஏதும் இல்லை -
பிணி போக்க வழியும் இல்லை!

ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவன்
மறைவதில்லை - ஆயிரம் ஊடல்கள் நடுவில்
வந்தாலும் - என் காதலும் அழிவதில்லை!

அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

--நிலாக்காவலன்!

1 comment:

  1. ஆயிரம் கைகள் மறைத்தாலும் - ஆதவன்
    மறைவதில்லை - ஆயிரம் ஊடல்கள் நடுவில்
    வந்தாலும் - என் காதலும் அழிவதில்லை!

    அந்த ஒற்றை நம்பிக்கையோடு!!!

    motha kavidhailaiyum intha oru idathula thookki niruthitta poo...dhoolllumaa

    ReplyDelete