Friday, May 25, 2012

கண்ணாம்பூச்சி

நள்ளிரவில் பிறந்து
நடுகடலில் மிதந்து
மெதுமெதுவாய் தவழ்ந்து
மென்மையாய் சிவந்து
உயரமாய் எழுந்து
உச்சிக்காலத்தில் கடிந்து
மேன்மையாய் ஓய்ந்து
மேகத்தினுள் மறைந்து
மாலையில் சாய்ந்து
மலையினுள் ஒளிந்து
ஏய் சூரியனே!!
உனக்கு ஒவ்வொரு நாளும் என்ன?
கண்ணாம்பூச்சியா?

No comments:

Post a Comment