Sunday, April 15, 2012

பெண் - வானம்




சுட்டெரிக்கும் சூரியனும்!
சூடு தணிக்கும் வெண்ணிலவும்!
ஒழித்துவைக்கும் மேகங்களும்!
குவிந்து கிடக்கும் நட்சத்திரங்களும்!
மழை இருட்டில் ஒளிவீசும் மின்னலும்!
காது கிழிக்கும் இடியோசையும்
வண்ணப்பிறை வானவில்லும்!
வந்து வந்து சென்றாலும் - அப்படியே
இருக்கிறது வானம்!
அதுபோல் தான் பெண்னே நீயும்!
சிறுதவறால் வரும் அவமானம் -
சாதித்தால் அனைத்தும் வெகுமானம்!
சந்தோசம் என்ன?
சில தோஷம் என்ன?
தேகம் என்ன?
சந்தேகம் என்ன?
நம்பிக்கை என்ன?
அவநம்பிக்கை என்ன?
அனைத்துமே உனக்கு துச்சம்!
எதையும் மனதில்  வைக்காதே மிச்சம்!
எப்பொழுதும் முடிவெடுத்திடு நிதானமாய்!  முடிவில் -
கொடுத்திடு உன் அன்பை  தானமாய்!
என்றும் இருப்பாய் பெண்னே வானமாய்!

- பொன்மாமகன்


--கண்டிப்பாய் விமர்சித்திடுங்கள்!

2 comments:

  1. (@_santhu) நல்ல தொடக்கம், நிறைய படித்திடுங்கள், தரம் தானாய் உயரும்!!

    ReplyDelete