Saturday, August 22, 2020

அம்மை

 உன் அம்மையும்

செல்ல மகள் தான்!

கள்ளமில்லா அன்புக்கு

சொந்தக்காரி!

சூடும் தாங்க மாட்டாள்- ஒரு

சுடு சொல்லும் தாங்க மாட்டாள்!

ஆனால்

உனக்காக பெரும்பாடு பட்டு விட்டாள்!


ஒரு நாள் முழுதும்

துடிச்சுத் தான் போனோமடி

- உனைக்கண்ட அந்த நொடி

- அந்த வலியும் தான் கானோமடி!

உன் அழுகுரல் கேட்ட நொடி

உள்ளமெல்லாம் பூரீப்படி!



29 வருடம் புரியவில்லை!

ஓர் இரவில் புரிய வைத்து விட்டாய்

தாய் தந்தை அருமையை!


என் செல்ல மகளே -

உனை எப்படி கொஞ்ச ?


என் பட்டே!

என் முத்தே!

என் அமுதே!

என் வைரமே!



உனை அம்மை என்றழைத்த நொடி!

நீ எதற்காய் என் பக்கம் திரும்பினாயோ?

நீ எதற்காய் எனை கண் திறந்து பார்தாயோ?

ஆனால் உன் பார்வை பட்ட அந்த நொடி!

நான் தகப்பனாய் பிறந்தேனடி!



உன் முகம் கண்டு உன் ஆச்சி தாத்தா பூரித்த போது!

நான் மகனாய் பிறந்ததின் பேறு அடைந்தேனடி!

No comments:

Post a Comment