Saturday, August 22, 2020

"அது", எது?

 அது!

எனது!

நான், பல நாள், தூக்கமிழந்தது!

"அது", எது?


என் தூக்கமெல்லாம்

இரவின் தூக்கத்துக்கு பின்னர் தான்!


மூடிய விழிகள் - முடிந்திடா எண்ணங்கள்;

அதிலும் பல வண்ணங்கள்!


கனவா?

வெறியா?

அல்ல - வெறும் எண்ணச் சுருள்களா?


என்றெண்ணி எண்ணியே - 

எண்ணிக்கொண்டிருந்தேன் - கொட்டிய முடிகளை!


மும்முறை தீனியும்

பெயர் சொல்ல ஒரு பணியும்

இருக்கிறது - நிறைவா!


அது தான், என் நிறைவா?


ஆசை, பேராசை - அது நிராசை!


என்னுடையது - ஆசையில் அடங்குவதல்ல;


தூரத்து கடல்!

குளிர் மணல்!

வானத்து வட்ட ஒளி!

மெல்லிசை காற்று!

இவற்றால் ஆனதல்ல - என் அது!


அது, "எது"?


அது, 

கடலலையைப் போல் - ஆர்ப்பரிக்கும் இரைச்சல்!

மனதெல்லாம் ஒரே குமைச்சல்!


எங்கேயும் நகலாமல்

எண்ணத்தினுடே எங்கெங்கோ அலைச்சல்!


நிறைந்திடாத என் நிறைவை

தூக்கி எறிந்தேன் -

அதுவழி வந்திட்ட இழிவால்

தனலாய் எரிந்தேன்!


முற்றும் - 

எரிந்ததாலோ

என்னவோ?


வசையெல்லாம் - இசை ஆயின!


காசின்றி வாங்கிய

கல்லடியிலும்

சங்கதி சத்தமே கேட்டது!



என், "எது" - இதுவாயிருக்குமோ??

இசையாய்  இருக்குமோ?

இரைச்சல் இசையாய், இனிக்குமோ?


ஆர்ப்பரித்த கடல் -

அமைதி கொள்ள ஆரம்பித்தது -

இரைச்சல் இசையால்!

No comments:

Post a Comment