Thursday, October 3, 2024

ஒளிக்கீற்று!

நடக்கவே இல்லை - ஆனால்

கால்கள் வலிக்கிறது!

பொதி ஏதும் சுமக்கவில்லை - ஆனால்

பாரமாய் இருக்கிறது!

எல்லோரும் இருக்கிறார்கள் - மனம்விட்டு

பேசத்தான் ஆள் இல்லை!

மூன்று வேளைச் சாப்பாடும் இருக்கிறது - 

பசிக்கத்தான் இல்லை!

அடித்த வெயிலோ என்னவோ -

என்னிடமெல்லாம் வறட்சி!

முளைப்பாரி எடுத்தும்

பெய்யாத மழை!

காக்காய் பறந்தாலோ,

விளக்கு எறிந்தாலோ,

SPBயின் தெம்மாங்கு கேட்டாலோ,

நீயா நானா பார்த்தாலோ - என் 

கண்ணில் மட்டும் எட்டிப்பார்க்கும்!

துக்கம் துனையிருப்பதாலோ - என்னவோ,

தூக்கம் கோவித்துகொண்டு விட்டது!

சுயம் இழந்து - சுரனை இழந்து

மனம் இழந்து - மானம் இழந்து

உறுதியிழந்து - ஊக்கமிழந்து

பிடியிழந்து

இடிவிழுந்து

சாறிழந்த வாழ்க்கை!

ஒன்று மட்டும் வாடிக்கை!

அது-

பஞ்சுப்பொதி ஒன்று

என் மடிப்பரப்பை நிரப்பி

ஆலோலம் பாடி

முத்துச் சிரிப்புதிர்த்து

செல்லம் கொஞ்சி 

கதைக் கேட்டு

கதைச் சொல்லி

கன்னம்தொட்டு

முத்தம்மிட்டு

கண்ணயர்ந்து 

துயில் கொன்டு -

என் இறுக்கம் தளர்த்தும்

என் கடுமை துரத்தும்

சாந்தப்படுத்தும்

ஒளிக்கீற்று!


அவளே மா!

அவளே மாதுரம்!

அவளே மாதுரத்தி!