Friday, May 25, 2012

கண்ணாம்பூச்சி

நள்ளிரவில் பிறந்து
நடுகடலில் மிதந்து
மெதுமெதுவாய் தவழ்ந்து
மென்மையாய் சிவந்து
உயரமாய் எழுந்து
உச்சிக்காலத்தில் கடிந்து
மேன்மையாய் ஓய்ந்து
மேகத்தினுள் மறைந்து
மாலையில் சாய்ந்து
மலையினுள் ஒளிந்து
ஏய் சூரியனே!!
உனக்கு ஒவ்வொரு நாளும் என்ன?
கண்ணாம்பூச்சியா?

Thursday, May 24, 2012

இளைஞனே வீறு கொள்!!


கல்வியை கற்றாள வேண்டிய நீ! இன்று
கள் அல்லவா அடித்து கூத்தாடுகிறாய்!

எழுதுகோல் பிடித்தெழுத வேண்டிய நீ! இன்று
ஊதுகுழலால் புகைவண்டியல்லவா ஒட்டிக்கொண்டிருக்கிறாய்!

சட்டத்தின் ஓட்டைகளை அடைக்கவேண்டிய நீ! இன்று
சாதிச்சாக்கடைக்குள் அல்லவா வீழ்ந்துகிடக்கின்றாய்!

அன்னையன்புக்கு அடிமையாக வேண்டிய நீ! இன்று
அராஜகத்திற்கு அல்லவா துணை போகின்றாய்!

பிறர்பசி போக்க வேண்டிய நீ! இன்று
உன் பசிக்கே வலிதெரியாதல்லவா திண்டாடுகிறாய்!

சிந்தித்து செயல்பட வேண்டிய நீ! இன்று
சினிமா சிறைக்குள் அல்லவா சிக்கிகொண்டிருக்கிறாய்!

காதலில் களிப்புற வேண்டிய நீ! இன்று
காமத்தை நோக்கியல்லவா திரும்பிக்கொண்டிருக்கிறாய்!

உழைத்து உருக வேண்டிய நீ! இன்று
அல்லல்படாது ஊஞ்சலாட அல்லவா அவாக்கொள்கிறாய்!

தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய நீ! இன்று
மேன்மேலும் தவறல்லவா இளைத்துக்கொண்டிருக்கிறாய்!

உன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புகின்றாயே!!
நீ யாரை புரிந்து கொண்டாய்??
உன் நாட்டையா?? அல்லது
அழுது வடியும் உன் வீட்டையா?

உன் வகுப்புத் தோழியின் நன் - நட்பிலும்
நஞ்சை தானே கக்கினாய்!

சரி இளைஞனே!
இருட்டிற்கு இரையானது போதும்!

இளைஞனே வீறு கொள்!

உன் பாதை மலர்களால் நிறைந்தது அல்ல!
ஆனால் முற்களையும் முல்லையாக்கும் திறனுடையவன் நீ!

இது வரை நீ அரியணை ஏற்றிவிட்டது போதும்!
எப்பொழுது நீ அரியணை ஏற போகின்றாய்!

ன்பாலும் அறிவாலும் -
க்கத்தை உருவாக்கு!
ரும்புக்கர முயற்சியால் -
ழத்தில் விளக்கேற்று!
ண்மையாய் உழைத்து -
ரை வளமாக்கு!
க்காளமிடும் -
மாற்றுக்காரர்களை அழித்திடு!
யம் தவிர்!
ழுக்கம் கொள்!
ய்வு கொள்ளாதே!
வை வழியில் நடந்திடு!

ஆகவே இந்திய இளைஞனே - வீறுகொள்!

இந்நாடு உன்னை தோளில் தூக்கிக்கொள்ள!

Tuesday, May 22, 2012

MY MOMMY!

What to carve??
Your Love??
Your Patience??
Your Talence??
Whenever I fail, I cry!
But, your love made me to try!!
In my childhood, I was wild-wolf!
you carved me as a man, by your mild!!
To meet the error, I fear!
Your love was my Protective wear!!
In all my nineteen - You're
My ALL!!
I was in you - near an year!
And I'm here - to hold you for years!!
Mommy - what I'm gonna reciprocate to you??
In my next birth - I pray to God - to be -
Mother of my mommy!!

PonMaaMagan 

Sunday, May 20, 2012

அம்மா - 2

ஏடு எடுத்தேன்!
உன்னை கவியாய் தீட்டிட!
ஆனால் எதை வரைந்திட?
உன் அன்பையா?
உன் பொறுமையையா?
உன் சாமர்த்தியத்தையா?
தோற்கின்ற போதெல்லாம் அழுது கொண்டிருந்தேன்!
உன் அன்பின் ஆக்கம் தாம் - எனை மீண்டும் முயற்சிக்க வைத்தது!
சிறுவயதில் சிறுபிள்ளைதனமாய் சீரிக்கொன்டிருந்தேன்!
உன் பொறுமையெனும் உளிதான் எனை சிறப்பாய் செதுக்கியது!
சோதனைகள் சூளும் போது சோர்வுற்றுறிறுந்தேன்!
உன் சாமர்த்திய சாணக்கியத்தனம் தான் - எனை சாதனை புரிய வைத்தது!
என் எல்லா 19 வருடத்திலும் - நீ தான்
என் எல்லாமும்!
ஒரு வருட காலம் எனை சுமந்தாய் - உனக்குள்ளே!
நானும் உன்னை சுமப்பேன் அம்மா - இனி
பல வருட காலம்!
சுமையாய் அல்ல - சுகமாய்!
உயிர்தந்து! உடல்தந்து! பின்
உதிரமும் தந்தாய்!
எதை தரப்போகிறேன் உனக்கு??
தாயே வேண்டுகிறேன் இறைவனிடம் - மறுபிறப்பில்
என் தாய் உனக்கு - தாயாக வேண்டுமென்று!